பாடல் 1. ப்ரியா
பல்லவி:
அன்பின் தெய்வமே ஆருயிர் இதயமே
தேடி வந்தோமே உம்மைத் தேடி வந்தோமே
அன்பு காட்டியே எங்களை வழி நடத்தினீரே
அன்புள்ள தேவன் அகிலத்தைத் தந்தீரே
சரணம்:
வானோர்களின் தேவன் வல்லமை இரட்சகர்
வழிகாட்டியவர் வசந்தத்தின் அற்புதர்
ஒளிமயமான வாழ்க்கை அர்ப்பணிக்கும் தெய்வம்
ஒலிவ மரமாய் என்றும் வசிக்கின்றார்
பாடல் 2. ப்ரவீன்:
நேற்று நாம் எல்லோரும் கூடினோமே
ஆண்டவரின் புகழைப் பாடினோமே
புதிய புதிய பாடல்களை இயற்றினோமே
அவை எல்லாம் அவர் புகழை எடுத்துச் சொல்லுதே
எங்களின் பாடல்களை உலகம் கேட்குமே
உலக மக்கள் மறுமலர்ச்சி அடைந்திடுவாரே
மாந்தர் எல்லாம் அவர் வழி நடந்திடுவாரே
பரத்தினிலே ஆண்டவரின் மனமும் குளிருமே
நாளை அவர் பிசாசிடம் கூறிடுவாரே
இவர்களே என் பிள்ளைகள் என்று சொல்லிடுவாரே
பிசாசுகள் நம்மைக் கண்டு பயந்து ஓடுமே
ஆண்டவரே தெய்வம் என்று உணர்ந்து கொள்ளுமே
பாடல் 3 கென்னடி
பல்லவி:
சின்ன சின்ன பாலகனாய் இயேசு பிறந்தார்
பாவிகளை மீட்டிடவே மனிதனாய் வந்தார்
சரணம்:
அவர் உன்னை நேசிக்கிறார் உன் உள்ளத்தைக் கேட்கிறார்
அவர் நம்மில் இருக்க நம்மையே கேட்கிறார்.
பாடல் 4: ஷெலினா
பல்லவி:
மனிதம் முழுதும் கடவுளின் சாயல்
மலர்கள் முழுதும் கடவுளின் கவிதை
ஒரு போதும் விலகாமல்
உடன் வந்து உன்னதம் சேர்க்கும் – மனிதம்
சரணங்கள்:
நிறங்களாலே வேறுபாடா கடவுள் நல்ல ஓவியன்
மொழிகளிலே பேதமுண்டா கடவுள் நல்ல காவியன்
அனைத்தும் இணைத்து வணங்கிடும் நாயகன்
காயங்கள் எங்கிலும் கடவுளின் குருதியே
மனுக்குலம் இணைத்திடத் தவித்திடும் தலைவனே
உலகம் முழுவதும் அவர் படைப்பு
உயிர்கள் அனைத்திலும் அவர்
படைப்பாற்றல் விளங்கும்
உயிர் விடும் மூச்சு அவர் சுவாசக் காற்றே
ஜாதி மத பேதங்கள் மூச்சுக் காற்றில் இல்லையே
முழு உலகம் அவர் பெயரால் ஒரே அணியில்
கரம் இணைத்து நிதம் மகிழும்
பாடல் 5 சாம் ராஜ்
பல்லவி:
இயேசு சாமிக்கு இன்னிசை இசைத்திடுவேன்
ஆராதனையும் ஆனந்த கீதமும்
அன்றாடம் ஏறெடுத்து
அவர் பொற்பாதம் பணிந்திடுவேன்
சரணம்:
வழி தப்பிப் போகையிலே என்
வழித்துணையாய் அவரே
தடுமாறி விழும் போது என்
சுமை தாங்கி அவரே
இன்னல் வந்த போதும்
இருள் சூழ்ந்த போதும்
தூக்கியெடுத்து தாலாட்டு இசைக்கின்றார்
பாடல் 6. மறைதிரு. சசிகுமார்
பல்லவி:
உலகம் போற போக்குல என்ன நடக்குதோ தெரியல
ஒத்துமைய வாங்கப் போனேன் எங்கேயும் கிடைக்கல
உத்தமரே நீங்க வந்து கத்துக் கொஞ்சம் தாருமய்யா
ஒத்துமையா நாங்க சேந்து வாழ வழி கூறுமையா
சரணங்கள்:
சாதி மத பேதமெல்லாம் பாக்குறாங்களே – மண்ண
சண்ட போட்டு நரகமாக ஆக்குறாங்களே
இயேசு சாமி காட்டிப் போன நல்ல வழி போகலியே
நம்ம சாமி படைச்ச மண்ணுல ஒத்தும வரலியே